வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, மார்ச் 26, 2006

நகைச்சுவை - 1

  • மகன்: அப்பா நாம சீக்கிரம் பணக்காரர்கள் ஆகிடலாம்.
    அப்பா: எப்படி?
    மகன்: நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயாக மாற்றுவது என்று சொல்லி கொடுக்க போறார்.

  • அப்பா: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க வாத்தியார் உனக்கு நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றார்? பையன்: முட்டாப் பய மவனேன்னு திட்டறார் அப்பா.

  • 51 ரூபாய் கடன் வாங்கினவர் 15 ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். ஏன்?
    பணத்தை 'திருப்பி' தந்தாராம்.

  • ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.

  • காவல்காரர் இரண்டு குடிமக்களை ஓரங்கட்டி விசாரிச்சார். பேர் & முகவரி என்னன்னு ஒருத்தரை பார்த்து கேட்டார். என் பேரு கனகு எனக்கு நிலையான முகவரி கிடையாது நாடோடி மாதிரி சார் என்றார். அடுத்த குடிமகனிடமும் அதே கேள்வியை ( பெயர் & முகவரி) காவல்காரர் கேட்டார். இரண்டாவது ஆள் சொன்னார் என் பேரு மணி, 15 வருசமா கனகு வீட்டிற்கு மேல் வீட்டில் தான் குடி இருக்கிறேன் சார் என்றார்.

கருத்துகள் இல்லை: