வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இரண்டாம் சுற்று பனிப்பொழிவு - புகைப்படம்

2010 பிப்ரவரி மாதம் 2 அடிக்கு மேல் பனிப்பொழிவு இருந்ததையும் அதன் படங்களையும் போன இடுகையில் இட்டிருந்தேன். மூன்று நாள் கழித்து செவ்வாய்கிழமை இரவிலிருந்து புதன் கிழமை நண்பகல் வரை அடுத்த சுற்று பனிப்பொழிவு இருந்தது. 1 அடிக்கு மேல் வரும் என்று சொன்னாலும் 7 அங்குல அளவுக்கு தான் பனிப்பொழிவு இருந்தது. இரவில் அதிக அளவு பனிப்பொழிவு இல்லை. காலையில் கடும் காற்றுடன் நிறைய பனிப்பொழிவு இருந்தது. குளிரை கூட தாங்கிடலாம், ஆனா காற்றுடன் வரும் குளிர் கொடுமையானது. கடும் காற்று என்றால் நிலைமை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். கடும் காற்றுடன் பனி பெய்ததால் 15 அடி தள்ளி உள்ள பொருட்கள் கூட தெரியவில்லை. இதனால் பனி அள்ளும் வேலையை கூட நகர அரசுகள் ஒத்தி வைத்தன. மாலை ஐந்து மணிக்கு மேல் புகைப்படம் எடுக்கலாம் என்று வெளியே சென்றேன். திடீர் திடீர் என்று காற்று அடித்தது, காற்றின் போது குளிர் அதிகமாக இருந்ததால் ஏன்டா வெளியில் வந்தோம் என்று ஆகிவிட்டது. 5 நிமிடம் கூட வெளியில் இருந்து இருக்கமாட்டேன். கையுறையையும் தாண்டி கை சில்லென்று ஆகிவிட்டது, எந்தளவு குளிர் இருந்திருக்கும் என்று பாருங்கள்.

வரும் திங்கள் இரவு 5 அங்குலத்துக்கு பனி இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.

1. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி. பனி அள்ளிய பிறகும் நிறைய பனி மீதம் இருக்கு, முழுமையாக சுத்தப்படுத்த குறைந்தது4 நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.



2. நடைபாதை சுத்தப்படுத்தப்பட்டாலும் சாலை இன்னும் முழுவதுமாக சுத்தப்படுத்தப்படவில்லை. நடைபாதையை சுத்தப்படுத்தியது அதை ஒட்டியுள்ள நிறுவனம், அரசு அல்ல.



3. சாலை சந்திப்பு, பனி அள்ளும் எந்திரம் வேலையில் உள்ளது.


.
.

வியாழன், பிப்ரவரி 11, 2010

கடும் பனிப்பொழிவுக்கு பின் - புகைப்படங்கள்

2010 பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பெய்த பனிப்பொழிவை பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலுள்ள வாசிங்டன் & பால்டிமோர் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது , 2 அடி உயரத்துக்கு மேல் பனி பொழிவு இருந்தது. அப்ப வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை (நல்ல முடிவு). பனிப்பொழிவு ஓய்ந்ததுக்கு அப்புறம் குடியிறுப்பு வளாகத்தில் சில புகைப்படங்களை எடுத்தேன். வரலாற்றில் இடம் பெற்ற இந்த பனிப்பொழிவை படம் பிடிக்கலை அப்படிங்கற அவப்பெயர் வந்துட கூடாது பாருங்க இஃகிஃகி.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து சனிக்கிழமை பகல் முழுதும் பனி பெய்தது. ஞாயிற்றுக்கிழமை புகைப்படம் எடுத்தேன். எடுத்ததில் சில உங்களுக்காக...


1. குடியிறுப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் தடுமாறும் மகிழுந்து.


2. குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழி


3. குடியிருப்பு வளாகம்



4. குடியிருப்பு வளாகத்தின் உள்பகுதி, நடைபாதை பகுதி. நடைபாதை பகுதியை சுத்தப்படுத்தினது வாடகை வாங்கறவங்க தான்.

.

வியாழன், பிப்ரவரி 04, 2010

மழை மறைவு பகுதி நமக்கு மட்டும் தானா?

தமிழகத்தில் மழை ஏன் குறைவா பெய்யுது என்பதற்கான காரணத்தை பள்ளி பாட புத்தகத்துல படிச்சிறுப்போம். காரணம் அதிக மழைப்பொழிவை கொண்டு வரும் 4 மாசம் இருக்கும் தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால். 2 மாசம் அடிக்கும் வடமேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகத்தின் உள் பகுதிகள் எப்பவும் வறண்ட பகுதிகள் தான்.

அமெரிக்காவுல மேற்கு கரையில் அடிக்கும் காற்று மழையை 4000 கிமீ தாண்டி கிழக்கு கடற்கரை வரை கொண்டு வருது. இங்க மட்டும் மலை இல்லையா? இருக்கு.


கேரளாவ தாண்டுனா நாம தான். ஏன் நம் பகுதி மட்டும் மழை மறைவு பகுதியா இருக்கு? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.

கடற்கரையை ஒட்டி இருப்பதால் நமக்கு அதிகமான மழை பொழிவு இருக்கவேணும். வானத்த பொழந்துகிட்டு கொட்ட வேணாம், குறைஞ்சபட்சம் குடிக்க பஞ்சம் இல்லாம தண்ணி கிடைச்சாலே போதும். ஏன் இயற்கை தமிழகத்துக்கு இந்த ஓரவஞ்சனையை செய்கிறது? புரியலை. தெரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்க.
.