வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஆகஸ்ட் 12, 2010

நீதி கதை- நாயும் கழுதையும்

ஒரு ஊர்ல இருந்த சலைவைத்தொழிலாளி ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். நாயிக்கு சலவைத் தொழிலாளி மேல் கோபம். என்னடான்னு கேக்கறீங்களா? அது சில முறை முதலாளி மேல் தொழிலாளி படுவானே அந்த மாதிரியான கோபம்.

எந்த மாதிரி?

கதை சொல்றப்ப குறுக்க பெரியமனுசனாட்டம் பேசக்கூடாது. சொன்னா இம் போட்டு கேட்டுக்கனும்.

ஒரு நாள் சலைவைத்தொழிலாளி நல்லா தூங்கி கிட்டு இருக்கறப்ப ஊர் சனத்து துணியை துவச்சு அவன் சேர்த்து வைச்சிருக்கற காசையெல்லாம் ஆட்டைய போடலாம்ன்னு ஒரு திருடன் வந்தான்.

அவனென்ன உங்களை மாதிரியா தினம் சம்பாதிக்கிற காச வங்கியில் போட.

திருடன கண்டா அதாவது நடு நசில தெரியாதவன் வீட்டுக்கு வந்தா நாய் என்ன பண்ணனுமோ அத பண்ணல.  ஏன்னா அதுக்கு தான் முதலாளி மேல் கோபமாச்சே. அதுக்காக கடமை தவறுவதா என்று கடுப்பான கழுதை நாமாவது முதலாளியை எழுப்புவோம்னு நினைச்சி கத்துச்சு. கழுதை கத்தற சத்தம் கேட்டு முதலாளி முழுச்சிட்டாரு. பார்த்தா நாய் சும்மா இருக்கு கழுதை கத்திக்கிட்டு இருக்கு, அவருக்கு சரியான கோவம். பின்ன நடு நசில நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கழுதை சத்துத்தால தூக்கம் கெட்டா கோவம் வருமா வராதா.  பக்கத்தில் கிடந்த கட்டைய எடுத்து கழுதை மண்டைல ஒரு போடு போட்டு கத்துன பாருன்னுட்டு தூங்கப்போயிட்டார். பாவம் கழுதை நல்லது பண்ண போயி மண்டைல அடி வாங்கினது தான் மிச்சம்.


நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்ம வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சாப்போதும்.

மேலுள்ள கதை முடிவு இப்படியும் இருக்கலாம்.

கழுதை சத்தம் கேட்டு முழிச்ச முதலாளி திருடன் ஓடுவதை பார்த்தார். நல்ல வேலை கழுதை கத்தினதால திருடன் ஓடிட்டான் நம்ம பணம் தப்பிச்சுதுன்னு கழுதை மேல் பாசம் அதிகமாயிடுச்சி. கழுதைக்கு நல்ல தீனியா போட்டார். கொஞ்சம் கொஞ்சமா நாயோட வேலையெல்லாத்தையும் கழுதை மேல கட்டிட்டார். பாவம் கழுதை. நாய் நல்லா தின்னுட்டு ஒரு வேலையும் செய்யாம இருந்தது.



நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்மல பாராட்டுரேன்னுட்டு அடுத்தவன் வேலையையும் நம்ம தலையிலேயே கட்டிடுவாங்க.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

இரண்டு நீதியும் நிதர்சனம் ...

குறும்பன் சொன்னது…

வாங்க செந்தில், ஆமாங்க. நான் பணிபுரிந்த இடத்தில் இரண்டும் நடத்திருக்குங்க.