வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், பிப்ரவரி 10, 2011

கறுப்பு பணம் வைத்திருந்தவர்களில் 15 பேர் பெயர் தெரிந்தது.

வெளிநாட்டில் கோடி கோடி கணக்கில் நம் நாட்டவர் பணத்தை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதது யார் யாரெல்லாம் என்பது தான்.  நம் இந்திய அரசும் செருமனியிடம் இருந்து லீக்டன்சுடைன் நாட்டின் LGT வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை கேட்டு பெற்றுள்ளது. ஆனா கேடி வேலை பண்ணி நமக்கு அது தெரியக்கூடாது என்று மறைத்துள்ளது.
2009 மார்ச் மாதமே செருமனி இந்தியாவிடம் அந்த பட்டியலை கொடுத்துவிட்டது. ஆனா நம்ம கை சுத்தமான மண்ணு அப்பட்டியலை வெளியிடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் கேட்டும் இந்த பதில் தான்.  இதில் 18பேரில் உள்ள 16 பேரின் விவரங்கள் தெகல்காவிடம் சிக்கியுள்ளது. தெகல்கா அதில் 15 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp

1. Manoj Dhupelia - மனோஜ் துபெலியா
2. Rupal Dhupelia - ரூபல் துபெலியா
3. Mohan Dhupelia - மோகன் துபெலியா
4. Hasmukh Gandhi- காசுமுக் காந்தி
5. Chintan Gandhi- சிந்தன் காந்தி
6. Dilip Mehta- திலிப் மேத்தா
7. Arun Mehta- அருண் மேத்தா
8. Arun Kochar- அருண் கொசார்
9. Gunwanti Mehta - குன்வண்டி மேத்தா
10. Rajnikant Mehta- ரஜினிகாந்த் மேத்தா
11. Prabodh Mehta - பிரபோத் மேத்தா
12. Ashok Jaipuria- அசோக் ஜெய்புரியா

3 அறக்கட்டளைகளின் பெயர்கள்

13. Raj Foundation- ராஜ் பவுண்டேசன்
14. Urvashi Foundation- ஊர்வசி பவுண்டேசன்
15. Ambrunova Trust - அம்புருனோவா டிரசுட்
16. பெரிய நிறுவனத்தின் சேர்மன் பெயர். தற்சமயம் அவரின் பெயரை வெளியிடவில்லை. 

இவங்கலாம் என்ன மாதிரியான வணிகம் பண்றாங்க எவ்வளவு பணத்தை பதுக்கி இருக்காங்க அப்படிங்கிற விவரத்தை அவங்க தரப்பு விளக்கத்தை கேட்ட பின் தெகல்கா வெளியிட முடிவுசெய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் 26 பெயர்களை பெற்றுள்ளதாக அரசு கூறி உள்ளது. அதனால் தெகல்காவிடம் கிடைக்காதவர்களும் உண்டு.

கொச்சி பிரிமியர் லீக் அணியை ஏலம் எடுத்தவர்களும் இந்திய அரசிடம் உள்ள கறுப்பு பணம் உள்ளவர்களின் பட்டியலில் உள்ளதாக பேசப்படுகிறது.

என்ன இது மொத்தமே இவ்வளவு பேர் தான் கறுப்பு பணத்தை பதுக்குனவங்களான்னு ஆச்சரியப்படாதிங்க.  ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. இது கொஞ்சமே கொஞ்சம் , இந்த கொஞ்சம் பேரை சொல்லவே அரசு முடியாதுங்குது. ஏன்னா நம்ம அரசியல் பெருந்தலைகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் நபர்களும் அதில் உள்ளது தான்.

குறிப்பு:- மேலும் விரிவான செய்திகளுக்கு உண்மைத்தமிழன் வலைப்பதிவை பார்க்கவும்.













2 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

குறும்பர் முன்னேற்ற சங்கம்

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50369

இஃகிஃகி

குறும்பன் சொன்னது…

என் பேர்ல கட்சி ஆரம்பிக்கவேண்டாம் என்று சொன்னாலும் பாசக்கார பயலுக கேட்க மாட்டிக்கறாங்க. :))

சரி ஆரம்பிச்சுட்டாங்க இனி அதன் வெற்றிக்கு பரப்புரையை ஆரம்பிக்க வேண்டியதுதான். :)