வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, அக்டோபர் 28, 2012

மத்திய அமைச்சரைவை மாற்றம் அக்டோபர் 28

மத்திய அமைச்சரவையில் அக்டோபர் 28, 2012 அன்று நடைபெற்ற மாற்றத்தில் 17 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்கள் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டன.

புதிய ஆய அமைச்சர்கள்:

ரகுமான் கான் - சிறுபான்மையினர் நலம்

தின்சா படேல் - சுரங்கம்

அஜய் மேக்கான் - வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு (விளைாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர்)

எம்.எம்.பல்லம் ராஜு - மனிதவள மேம்பாடு

அசுவனி குமார் - சட்டம், நீதி

ஹரீசு ராவத் - நீர்வளம் (உத்தராகண்டத்தில் முதலமைச்சர் பதவி தரப்படாததால் ஆய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்)

சந்த்ரேசு குமாரி கடோச் - கலாசாரம்


துறை மாற்றப்பட்டுள்ள ஆய அமைச்சர்கள்:

வீரப்ப மொய்லி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

ஜெய்ப்பால் ரெட்டி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தார்)

கமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரம்

வயலார் ரவி- வெளிநாட்டு இந்திய விவகாரம்

கபில் சிபல் - தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சி.பி.ஜோஷி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

குமாரி செல்ஜா - சமூக நீதி மற்றும் நலம்

பவன் குமார் பன்சால் - ரயில்வே

சல்மான் குர்ஷித் - வெளியுறவு (சட்டம், நீதி, சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்தார்)

ஜெய்ராம் ரமேஷ் - கிராமப்புற வளர்ச்சி



புதிய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

மனீஷ் திவாரி - செய்தி, ஒலிபரப்பு

கே.சிரஞ்சீவி - சுற்றுலா



துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):

ஜோதிர் ஆதித்யா சிந்தியா - மின்சாரம்

கே.எச்.முனியப்பா - குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (K ஊர் கோலார்,  H தந்தை அனுமப்பா)

பாரத்சின்ஹ் மாதவ்சிங் சோலங்கி - குடிநீர் மற்றும் உடல்நலம்

சச்சின் பைலட் - கார்ப்பரேட் / தொழில்துறை

ஜிதேந்திர சிங் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு



புதிய இணையமைச்சர்கள்

சசி தரூர் - மனித வள மேம்பாடு

கொடிகுன்னில் சுரேஷ் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

தாரிக் அன்வர் - வேளாண்மை

கோட்லா ஜெய சூர்ய பிரகாஷ் ரெட்டி- ரயில்வே

ராணீ நராஹ் - பழங்குடியினர் நலம்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி - ரயில்வே

அபு அசிம் கான் சவுத்ரி - சுகாதாரம், குடும்ப நலம்

சர்வே சத்யநாராயணா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

நிநாங் எரிக் - சிறுபான்மையினர் நலம்

தீபா தாஸ் முன்ஷி - நகர்ப்புற வளர்ச்சி

போரிகா பல்ராம் நாயக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்

கிள்ளி க்ருபாராணி - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்

லால்சந்த் கடாரியா - பாதுகாப்பு


துறை மாற்றப்பட்டுள்ள இணையமைச்சர்கள்:

இ.அகமது - வெளியுறவு

டி.புரந்தேஸ்வரி - வர்த்தகம் மற்றும் தொழில்

ஜிதின் பிரசாதா - பாதுகாப்பு மற்றும் மனிதவள மேம்பாடு

எஸ்.ஜெகத்ரட்சகன் - புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

ரஞ்சித் பிரதாப் நாராயின் சிங் - உள்துறை

கே.சி.வேணுகோபால் - பயணிகள் விமானப் போக்குவரத்து

ராஜீவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்ட கமிஷன்


http://www.ndtv.com/article/india/cabinet-reshuffle-list-of-ministers-285220
http://news.vikatan.com/index.php?nid=10980#cmt241

சுரங்க ஊழல் வெளிவந்த போது யார் எப்போ அத்துறையின் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது தெரியாததால் அமைச்சரவை மாற்றத்தை என்பதிவில் சேமிக்கலாம் என்று தோன்றியதின் விளைவு.

2 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

மறுபடியும் விவாதத்திற்கும்,விமர்சனத்திற்குரியவர்கள் சல்மான் குர்ஸித்,சச த்ரூர்,சிரஞ்சீவி.

கூடவே குடும்ப ஜனநாயகம் வளர்க்கும் இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்கவே!

குறும்பன் சொன்னது…

சல்மான் குர்சித்துக்கும் சசிதரூருக்கும் பதவி கொடுத்தது தவறு. ஆந்திரபிரதேசத்தில் காங்கிரசு நிலை மோசமாக உள்ளதால் சிரஞ்சீவிக்கு கொடுத்துள்ளார்கள், வேற வழி இல்லை. தெலுங்கானாவில் காங்கிரசு காலி, ராயலசீமையில் ஜெகனால் காங்கிரசு காலி. ஆந்திரா மட்டுமே கை கொடுக்கலாம். குடும்ப உறவுகளை வளர்த்து அவர்களுக்கு மட்டுமே பதவியை கொடுத்து சனநாயகத்தை காப்போம் :)).