வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், நவம்பர் 05, 2012

We oppose present I-T Act 66A, Demanding change on it.


I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

*சாமானிய மக்கள் கருத்து தெரிவிப்பதை ஒடுக்கும் இச்சட்டம் மாற்றப்படவேண்டும்.

* இச்சட்டம் அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுருமையை முற்றிலும் பறிக்கிறது. இங்கு பேசுதல் என்பது எழுத்தில் கருத்து தெரிவிப்பது ஆகும்.

*மனஉழைச்சல் (annoyance) என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

* விசாரணை முடியும் வரை கைது செய்யக்கூடாது.

* Inconvenience, obstruction, insult, injury, hatred என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.

* அரசியல் தலைவர்களை அல்லது பொதுவாழ்வில் உள்ளவர்களை விமர்சிக்கும் போது இச்சொற்களை பயன்படுத்த வேண்டி வரும் அவற்றை குற்றமாக கருதக்கூடாது.

2 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பர் குறும்பன்.

வாழ்த்துக்கள்!!!

இணைய சுதந்திரத்திற்கு குரல் கொடுப்போம்!!

நன்றி

குறும்பன் சொன்னது…

நன்றி சார்வாகன். குரல் கொடுப்போம் உரிமையை பறிப்பதை எதிர்ப்போம்.