வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், மே 17, 2016

Exit Poll முடிவுகள் (தேர்தலுக்கு பின்பு வந்த கருத்து கணிப்பு)

Exit Poll  என்ற சொல்லுக்கே நம் இந்திய தொக்காக்கள் புது பொருள் கொடுத்துள்ளன.

பொதுவாக Exit Poll என்றால் முடிவுகளில் பெரும் மாற்றம் இருக்காது. ஆனால் எடுத்த ஐந்து பேரின் முடிவும் பெரிதும் மாறுபட்டுள்ளது.  இதிலிருந்தே இது Exit Poll  அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

எப்பவும் கருத்து கணிப்பு வெளியிட்டால் இத்தனை % முன்ன பின்ன இருக்கும் என்பார்கள் இவர்கள் அப்படி எதையும் தெரிவிக்கவில்லை \ தெரிவிப்பதுமில்லை.

Exit Poll என்றால் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களிடன் எடுக்கப்படும் கேட்கப்படும் கருத்தை தெரிவிக்கிறார்கள் என்று பொருள். உலக வழக்கம் இது தான். ஆனால் நம்மூரில் அப்படியில்லை

இங்கு Exit Poll என்பது வாக்குப்பதிவு முடிந்த பின் முன்பே எடுத்த கருத்து கணிப்பை வெளியிடும் கருத்து கணிப்பு என்று பொருள்.

இப்படி வெளியாகும் Exit Poll  வைத்து அதை நம்புவர்கள் தான் மண்டையை பிச்சுக்கணும், நேரில் சென்று கருத்து கேட்காமல் விட்டத்தை பார்த்து எழுதுவது  தன் கருத்தை எழுதுவது அதற்கு செய்தி இதழ்கள் தொக்கா போன்றவை.

இந்திய ஒன்றியத்தில் இதுவரை எந்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் அதாவது Exit Poll  எதுவும் பலித்ததில்லை. காரணம் நம் ஒன்றியம் அதுகூட வேண்டாம் மாநிலங்களே பன்முகத்தன்மை உடையது. ஒவ்வொரு 25\50 கிமீக்கு நம் புவியமைப்பு பழக்கவழக்கம் சமூக அமைப்பு மாறும். வாக்கு போடும் போது சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற காரணிகளும் பங்குபெரும். மேலும் அந்த வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கும்.  இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மேற்கத்திய நாடுகள் முறையையே நாமும் பின்பற்றினால் நம் கருத்துகணிப்பு எக்காலத்திலும் பலிக்காது.


கருத்துகள் இல்லை: