வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், அக்டோபர் 09, 2017

நாற்பதுக்கும் மேலும் நின்று விளையாட - 18+

எக்சைல் புத்தகத்தில் சாரு நிவேதிதா கூறியதை அப்படியே எழுதியுள்ளேன்.

காயகல்பம்
காயம் - உடல்
கல்பம் - நரை திரை பிணி மூப்பு இல்லாமல் உடலை கல் போன்று வைத்துக்கொள்வது

கற்ப மூலிகைளில் ஒன்றான தூதுவளைக் கீரையை  மிளகு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு  மண்டலம் தின்றால் ஆண்மை அதிகரிக்கும்.

தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி  பாலில் கலந்து உட்கொண்டாலும் ஆண்மை அதிகரிக்கும்.

தாலிக் கீரை என்று ஒரு கீரை உள்ளது. இதன் இலை தாலியை போல் இருக்கும். இதை தொடர்ந்து உண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தையத்தை காலையில் ஊறப்போட்டு மாலையில் அதன் நீரை வடிகட்டி ஒரு தம்ளரில் போட்டு கவிழ்த்து போட்டு மூடி வைத்து விடவேண்டும். மறு நாள் காலையில் முளை விட்டிருக்கும் வெந்தயத்தை தின்ன வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறைவதோடு ஆண்மை அதிகரிக்கும்.

துளசி கொழுப்பை குறைக்கும்.

கருந்துளசி இலைகள் 9உம் மூன்று நாட்டுப் பூண்டும் கொஞ்சம் இஞ்சியும் பச்சையாக படுக்க போகும் முன் உண்டேன் கொழுப்பு பெருமளவில் குறைந்தது என்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

பசலிப் பழம், நாவல் பழம் இரண்டும்  கொழுப்பை குறைக்கும்.


  1. அரசம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் பருகுதல்.
  2. ஓரிலைத் தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தல்.
  3. ஒற்றைச் செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து  நீரில் கொதிக்க வைத்து வெண்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தல்.
  4. கசகசாவை ஊற வைத்து தின்பது
  5. இலுப்பைப் பூவை  பாலில் போட்டு காய்ச்சி குடித்தல்
  6. சீரகப்பொடி வில்வப் பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து தின்பது
  7. நெய் மிளகு உப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை இவைகளை சேர்த்து  துவையலாக்கி தின்பது.
  8. வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேக வைத்து தினமும் இரு வேளை தின்பது.
தாது விருத்தி நீடித்த உடல் உறவு ஆகியவற்றுக்கு மேற்கண்ட மூலிகைகளுக்கு ஈடாக எந்த வயாக்ராவும் இல்லை. இதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்ட நான் மண்டலம் மண்டலமாக மாற்றி மாற்றி இவ்விசயங்களை உண்டு வருகிறேன்.

அதனால் தான் 2 மணி நேரம் foreplay இல்லாமல் என்னால் கலவியில் ஈடுபட முடிகிறது.     2 மணி நேரம் foreplay  இல்லாமலேவா என்று சில அப்பாவிகள் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது காலையில் இஞ்சி இரவு கடுக்காய்  ஒரு மண்டலம் உட் கொள்ளுங்கள்  நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்பது.

துவர்ப்பு சுவைக்கும் தாது விருத்திக்கும் தொடர்பு உண்டு என்பது என் இளமை ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
காட்டு;- மாதுளம் பழம், அதிமதுரம், கொட்டைப் பாக்கு

உடல் உறவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கொட்டைப் பாக்கைக் கடித்து தின்று விட்டால் விந்து நின்று போகும். நின்று போகும் என்றால் விந்து வெளிவர மணிக்கணக்கில் ஆகும்..

நின்று ஆட வாழ்த்து.😊 😄

                                                                                                                                                                                                                                                                                                                                                     






கருத்துகள் இல்லை: