வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், அக்டோபர் 23, 2017

நாள் கணக்கு - மண்டலம்


கோள்கள் (நவகிரகங்கள்) 9
விண்மீன்கள் *(நட்சத்திதரங்கள்) 27
ராசிகள் 12
எல்லாத்தையும் கூட்டுனா 48 (9+12+27)
ஒரு மண்டலம் 48 நாட்கள்

இந்திய இந்து மரபில் பதினெட்டு என்ற எண் சிறப்பு பெற்றது. வியாசர் எழுதிய தொன்மங்கள் (புராணங்கள்) 18, ஐயப்பனின் புனித படிகள் 18, சபரிமலையை சுற்றி உள்ள மலைகள் 18 , கீதையின் அத்தியாயங்கள் 18 இப்படி.



ஏன் ஓம் முருகா போற்றி, ஓம் வேலவா போற்றி ,.... என்பது போன்ற அனைத்து போற்றி மந்திரங்களையும் 108 முறை ஓதுகிறார்கள்? அது என்ன 108? எச்சமிச்சா இருக்கக்கூடாதா?

108 என்பது 12, 9, 27, 18 என்ற எண்களால் வகுபடும் மிகச்சிறிய எண்.

மேலும் 1, 2, 3, 4, 6, 9  என்பதால் வகுபடும் எண் என்பதும் அதற்கு மேலும் சிறப்பை கூட்டுகிறது.






கருத்துகள் இல்லை: