வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூன் 19, 2018

பேலியோ

அடிக்கடி மறந்து விடுவதால் இங்கு போட்டுள்ளேன். எழுதியது நியாண்டர் செல்வன்
இது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலொசனை இன்றி பின்பற்றவேண்டாம்.
——-
இந்த டயட்டில் தானியத்தை எந்த அளவு தவிர்க்கிறீர்களோ அந்த அளவு நல்லது. காலரி கணக்கு பார்க்கவேண்டியது இல்லை. பசி அடங்கும் வரை உண்ணலாம்.
விதிகள்:
மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே
சர்க்கரை, தேன், இனிப்புகள், கோக்/பெப்சி உணவகத்தில் சமைத்தது, பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் அனைத்தும் தவிர்க்கணும்
அசைவ டயட்:
மீல் 1:
3 முட்டை ஆம்லட். முழு முட்டை. வெள்ளைக்கரு அல்ல. மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லட் கூட உண்ணலாம். பிரச்சனை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.
மீல் 2:
100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ்.நெய்யில் வணக்கி உண்ணலாம், ஊறவைத்தும் உண்ணலாம்.
OR
நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்
OR
பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.)
மீல் 3:
பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். பசி அடங்கும் அளவுக்கு. வாணலியில் வறுத்தால் சமையல் எண்னெயாக நெய் பயன்படுத்தவும்
ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்
முட்டை சேர்த்த சைவ டயட்:
மீல் 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி.பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
மீல் 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய் (பசி அடங்கவில்லையெனில், அவசியமானால் மட்டும் தேங்காய் சேர்க்கவும்).
மீல் 3:   4 முட்டை
ஸ்னாக்: 1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்
முட்டை சேர்க்காத பியூர்வெஜ் சைவ டயட்
Meal option 1: 100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் .பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.பட்டர் டீ செய்முறை இங்கே கொடுக்கபட்டுள்ளது.
Meal option 2: காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளால்க நறுக்கி இட்டிலி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும். உடன் காய்கறி சாலட்/ காய்கறி சூப் ஏராளமாக பருகவும்.  அவகாடோவும் சேர்க்கலாம்
Meal option 3:  முழுகொழுப்பு பாலில் செய்த பனீர் டிக்கா, பனீர் மஞ்சூரியன்.பசி அடங்கும் அளவுக்கு
சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே
தவிர்க்கவேன்டியவை
பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)
அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்
பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டைகடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலகடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்
பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற
கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும்,. முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.
அளவு கட்டுபாடு இன்றி உண்ணகூடியவை
மாமிசம், மீன், முட்டை, பனீர் அல்லது சீஸ் ,காய்கறிகள்,கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)
தவிர்க்கவேண்டிய இறைச்சி:
சாஸேஜ், ஸ்பாம் முதலான புராசஸ் செய்யபட்ட இறைச்சி தவிர்க்கவேண்டும்
கொழுப்பு அகற்றப்பட்ட லீன் கட்ஸ் வகை இறைச்சி, தோல் இல்லாத கோழி
கருவாடு (மிதமான அளவுகளில் உண்னலாம். தினமும் வேண்டாம்)
முட்டையின் வெள்ளைகரு மட்டும் உண்பது தவிர்க்கபடவேண்டும். முழு முட்டை உண்னவேண்டும்
எண்ணெயில் டீஃப் ப்ரை செய்த இறைச்சி
உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ்                                                                                                                 முள்ளங்கி
பாகற்காய்
காரட் (200 grams max. dont take daily)
பீட்ரூட் (200 grams max. dont take daily)
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ                                                                                                                           பீர்க்கங்காய்                                                                                                   புடலங்காய்  ,சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
நிலக்கடலை
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய்                                                                                                                     பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
சுவையான பேலியோ சைவ ரெசிபிகளை இத்தளத்தில் காணலாம்
___________________________________________________
இது முகநூலில் இயங்கும் ஆரோக்கி யம்& நல்வாழ்வு எனும் குழுமத்திற்கான டயட். இதில் மேலும் கேள்விகள் இருந்தால் இக்குழுவில் இணையவும். இக்குழுவின் பதிவுகளை முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்திலும் படிக்கலாம்.
மேலும் கேள்விகள் இருந்தால் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைந்து கேட்கவும்.
https://selvan.wordpress.com/2015/03/25/paleo-diet-for-beginners/  

புதன், மே 02, 2018

ஆத்தி பட்டப் பெயர்

அத்தி என்பது பூ, அத்தி மரம் என்பது கூட உள்ளது. இதில் வேறு சிறப்புகள் இல்லை.
ஆத்தி என்பதும் பூ , ஆத்தி மரம் கூட உள்ளது. இது சிறப்பானது. ஆத்தி பூ சோழ பெரு வேந்தர்களின் குடிப்பூ. சிவபெருமானும் ஆத்தி பூ சூடியிருந்தாராம். ஆத்தி மரம்

உறுதியானது. இதை கருங்காலி என்றும் கூறுவார்கள்.

சோழனுக்கு ஆத்திப் பூ ; சேரனுக்கு பனம் பூ ; பாண்டியனுக்கு வேம்பம் பூ

நெடுங்கிள்ளியின் உறையூரை பிடிக்க இன்னொரு சோழன் நலங்கிள்ளி முயலும் போது  அடேய் வெண்ணைகளா நீங்க இருவரும் ஆத்தி பூ காரனுங்கடா, நீங்க சண்டை போடுவது பனம்பூ சூடிய சேரனோ வேம்பம் பூ சூடிய பாண்டியனோ அல்ல அவனும் ஆத்திப்பூ சூடியவனே. சண்டையில் ஒருத்தன் தான் வெற்றி பெற முடியும் உங்களில் யார் தோற்றாலும் தோற்பது ஆத்திப்பூ சூடியவனே, அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா? இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள் என்று கோவூர் கிழார் என்ற பாணபத்திர ஓணாண்டி கூறினாராம்.

பாணபத்திர ஓணாண்டி பேச்சை சண்டையில் கில்லியான கிள்ளியில் ஒருவன் கேட்கலை (ஓணாண்டி பேச்சை எவன் கேக்கறான்), காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று  நெடுங்கிள்ளி மண்டைய போட்டதும் போர் முடிவுற்றது.

என் அப்புச்சியின் பட்டப் பெயர் ஆத்தி. அப்புச்சி  அம்மாயி எல்லோரையும் தாத்தா ஆயா என்றே நான் கூப்பிடுவேன். அத்தி என்றால் பூ என்று மட்டும் தெரியும் ஆத்தி  என்று பூ, மரம் இருப்பது தெரியாது. தாத்தாவுக்கு ஆத்தி என்று ஏன் பட்டப்பெயர் வந்தது என்று ஆயாவிடம் கேட்டேன் அவருக்கும் காரணம் தெரியவில்லை. இதனால

ஆத்தின்னு சொல்றாங்களோ, அதனால ஆத்தின்னு சொல்றாங்களோ என்று நானே பல ஏரணங்களை கற்பித்துக்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

வருந்துகிறோம் என்று தினமலரில் விளம்பரம் கொடுத்தோம். உள்ளூர் முகவரிடம் கொடுத்துவிட்டோம். அச்சமயம் எங்கள் ஊரில் தினமலரை நிறைய வீடுகளில் வாங்குவார்கள் தினமலரில் விளம்பரம் கொடுக்க அதுவும் ஒரு காரணம்.

தினமலரில் வேலை செய்ததால் அவருக்கு (முகவருக்கு) ஆங்கிலத்துடன் தமிழ் புலமை மிக அதிகம், அந்த அளவு தமிழ் புலமை இல்லைன்னா தினமலரில் வேலை செய்ய  முடியுமா?. விளம்பரத்தில் அவரே திருத்தம் எல்லாம் செய்து மிக சிறப்பாக வெளியிட்டார். ஆத்தி என்று தமிழில் எச்சொல்லும் இல்லை இது ஆர்த்தியாக இருந்திருக்கும், ர்  என்பது இங்கு அமைதி (ஆங்கிலத்தில் சில எழுத்துகள் silence இல்லையா அது போல்) என கருதி ஆர்த்தி கவுண்டர் மறைவு என்று போட்டுவிட்டார். ஆர்த்தி என்று  எழுத்தில் இருந்தாலும் அதை ஆத்தி என்றே சொல்லவேண்டுமாம், அமைதி அமைதி. படத்தை மாற்றாமல் (தினமலர் முகவருக்கு நன்றி) அப்படியே போட்டதால்  படித்தவர்கள் பார்த்தவுடன் ஆத்தி கவுண்டர் (எத்தனை  பேர் ர்-ஐ கவனித்தார்களோ) சிவபதவியை அடைந்து விட்டார் என புரிந்து கொண்டார்கள். தினமலரில் ஆர்த்தி என்று  வந்த பிறகே இது  தெரிந்தது, வந்த பின் ஏன்யா கொடுத்த மாதிரி வெளியிடவில்லை என கேட்கவில்லை. கேட்காமலே தினமலர் முகவர் விளக்கம் கொடுத்தார்.

நாங்களும் ஆர்த்தி தான் ர் அமைதி கொண்டு ஆர்த்தி என்பது ஆத்தி என கூறப்பட்டு வந்துள்ளது என  2017 அக்டோபர் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். புதிதாக கட்டிய

கட்டடத்துக்கு கூட ஆர்த்தி என்றே பெயர் வைத்துள்ளோம்.

நீதி - தினமலர் முகவரை நம்பினால்  தமிழில் புலமை பெறலாம்.

குறிப்பு - 
என் தாத்தாவின் பட்டப்பெயர் ஆத்தி என்பதால் நாங்கள் சோழ அரச மரபை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. சோழ அரச மரபை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும்

ஆராய்ச்சியில்  யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இத்தகவல் உதவும்.

புதன், பிப்ரவரி 21, 2018

காவிரி கடந்து வந்த பாதை

காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது.  காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.

1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.

1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.

1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.

1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது

1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது

1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால்  கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.

1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா  4 நாள்கள் உண்ணாவிரதம்

1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு  எதுவும் எட்டப்படவில்லை.

1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.

1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.

1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.

1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின்  மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி  நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.

1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.

1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205  டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.

1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள்  பேச்சு.

1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.

1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை

2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு  நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை  திறந்துவிட ஆணையிட்டார்.

2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.

2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்

நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.

2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.

2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.

2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.

2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.

2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.

2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.

செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.

செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.

செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.

செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு

அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு

அக் 8 -  காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென  உச்ச நீதி மன்றம் ஆணை.

அக் 8 -  பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.

அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை  தொடுத்தது.

அக் 9- கருநாடகாவை  கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.

அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.

நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8  டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.

நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.

டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.

டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.

டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 21 -  நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.

டிச 25 - அரசின் அழைப்பிதழில்  நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.

2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்

பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.

பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.

பிப் 13 - குறைந்த அளவு  நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.

பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு  அரசிதழலில் வெளியிட்டது

2014 சன 6-  காவிரி நடுவர் நீதிமன்ற புதிய  தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்


2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று  கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை  விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.

நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.

2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.

செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.

செப் 11 -  உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.

செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை  திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.

செப் 20 -  4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

அக் 03 - காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது

2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில்  தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க  வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி  ஆக குறைப்பு

.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.






ஞாயிறு, ஜனவரி 21, 2018

Ice Cream செய்வது எப்படி? சர்க்கரை இல்லை கொழுப்பு உண்டு என்பதால் பேலியோ மக்களுக்கு இது உதவலாம்

Ice Cream செய்வது எப்படி? Ice Cream கருவி இல்லாமலும் சர்க்கரை இல்லாமலும் சேர்த்தும்.ஆனா முட்டை கரு உண்டு

தேவையான பொருட்கள்
முட்டை 8
Heavy Cream பால்
கொழுப்பு  நீக்காத பால்
வெண்ணிலா சாறு
       * வேண்டுமென்றால் - சிவப்பு பெர்ரி பழம், வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை


அடுப்பில் வைத்து சூடாக்கும் முறை 

1. எட்டு முட்டை மஞ்சக்கருவை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளைக்கருவை பயன்படுத்தக்கூடாது. சர்க்கரை வேண்டுமென்றால் மஞ்சக்கருவுடன் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள். சர்க்கரை வேண்டாம் ஆனா இனிப்பு வேணும் என்பவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக உள்ள சர்க்கரையை பயன்படுத்தவும்.  எச் சர்க்கரையையும் பயன்படுத்தாமலும் இருக்கலாம்.
2.Heavy Cream பாலையும் கொழுப்பு நீக்காத பாலையும் சம அளவில் கலந்து குறைந்த மிதமான சூட்டுக்கு நடுவில் சூடாக்குங்கள். அதில் வெண்ணிலா பொடி அல்லது வெண்ணிலா சாறு அல்லது வெண்ணிலா கொட்டையை போட்டு சூடாக்கவும். அப்ப அப்ப கிளரிவிடவும். பொங்குவது போல் வரும்போது (பால் சிறிது மேலே வரும் போது) அடுப்பு தீயை அணைத்து விடவும்.
3. கொதிநிலைக்கு இந்த பால் கரைசலில் சிறிதை அடித்து வைத்த மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும். (முதலில் நிறைய சேர்த்தால் முட்டை வெந்து விடும்) பின்பு கொதிநிலையில் உள்ள பால் சிறிது சேர்த்து அடிக்கவும். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து அடிக்கவும். பாதி பாலுக்கு மேல் தீர்ந்ததும் எல்லாத்தையும் கொட்டி நன்றாக அடிக்கவும்\கிளரவும்.
4. இப்ப மஞ்சள் கருவுடன் பாலும் கலந்து உள்ள கரைசலை அடுப்பில் குறைந்த சூட்டில் பொங்குவது போல் வரும் வரை சூடாக்குங்கள். இதில் மீண்டும் வெண்ணிலா சாறை சிறிது சேருங்கள். துக்கியூண்டு உப்பையும் சேருங்கள். இக்கரைசலை கிளரிக்கொண்டே இருக்கவேண்டும். பொங்கும் நிலைக்கு வந்ததும் தீயை அணைத்து பாத்திரத்தை தூக்கிவிடுங்கள்.
5. பால் உள்ள பாத்திரத்தின் சூடு போக வேண்டும். அதனால் பாத்திரத்தை குளிர் நீர் உள்ள சட்டியில் வைத்து குளிர்வியுங்கள், இது விரைவாக குளிர்விக்க உதவும்.
6. குளிர்ந்த கரையலை நன்றாக கிளரவும் பின் அக்கரைசலை Freezer வெப்பநிலையை தாங்கும் டப்பாவிலோ கண்ணாடி பாத்திரத்திலோ ஊற்றி அதை மிகுதியாக குளிர வைக்கவும் Freezer part of fridge. அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டவும் இப்போது பெர்ரி பழத்தை மிக்சியில் அடித்து அதை கலந்து பின் நன்றாக கிளரவும். (பெர்ரி இனிப்பு ஆகும்) பெர்ரி சுவைக்கு பதில் சாக்ல்லேட் Ice Cream வேண்டுபவர்கள் சாக்லேட்டை கரைத்து ஊற்ற வேண்டும் என்ன சுவை வேண்டுமோ அதை ஊற்றுங்கள். மீண்டும் Freezers இல் வைக்கவும்.
7. மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezers இல் வைக்கவும். இப்படியாக நன்றாக Ice Cream ஆனது கெட்டியாகும் (Freeze) வரை அரை மணிக்கு ஒரு முறை எடுத்து கிளரிவிடவும்.
8. கெட்டியானதும் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் கழித்து சுவையுங்கள்.


மற்றொரு முறை - இதில் சூடு பண்ண வேண்டாம்.

1. முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream . பாலையும் ஒரு மணி நேரம் fridge இல் வைத்து குளிர வைக்கவும்.
2. முட்டை மஞ்சள் கரு 4 அல்லது 6 உடன்1 மணி நேரம் குளிர்ந்த முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream பாலையும் வெண்ணிலா சாறு சில துளிகளையும் சர்க்கரை தேவைப்படும் அளவு அல்லது சேர்க்காலும் இருங்கள். இதை நன்றாக அடித்து சிறிது நேரம் கிளருங்கள்.கரைசலை கடுங் குளிரை தாங்கும் கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றவும்.
3. இதை Freezer sல் 1 மணி நேரம் வைக்கவும். சிவப்பு பெர்ரி பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
4. Freezer ஒரு மணி நேரம் இருந்த Ice Cream கரைசலை வெளியே எடுத்து நன்றாக கிளரவும் அதனுடன் சிவப்பு பெர்ரி பழம் அரைத்த கரைசலை ஊற்றவும். பின்பு நன்றாக கிளரவும். பின்பு அதை எடுத்து Freezer இல் வைக்கவும். மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezer இல் வைக்கவும். பின்பு 5 மணி நேரம் Freezers லேயே இருக்கட்டும்.
5. Freezer இல் எடுத்து சுவையுங்கள்.
முட்டை இல்லாமலும் Ice Cream செய்யலாம். முட்டையுடன் செய்வது பழங்காலத்து முறை. கொழுப்பு வேண்டும் என்பவர்களுக்கானது. எனக்கு கொழுப்பே இல்லை அதனால் முட்டையுடன் உள்ளது தான் எனக்கு