வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், பிப்ரவரி 21, 2018

காவிரி கடந்து வந்த பாதை

காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது.  காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.

1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.

1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.

1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.

1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது

1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது

1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால்  கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.

1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா  4 நாள்கள் உண்ணாவிரதம்

1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு  எதுவும் எட்டப்படவில்லை.

1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.

1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.

1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.

1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின்  மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி  நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.

1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.

1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205  டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.

1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள்  பேச்சு.

1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.

1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை

2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு  நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை  திறந்துவிட ஆணையிட்டார்.

2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.

2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்

நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.

2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.

2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.

2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.

2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.

2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.

2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.

செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.

செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.

செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.

செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு

அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு

அக் 8 -  காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென  உச்ச நீதி மன்றம் ஆணை.

அக் 8 -  பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.

அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை  தொடுத்தது.

அக் 9- கருநாடகாவை  கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.

அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.

நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8  டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.

நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.

டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.

டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.

டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 21 -  நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.

டிச 25 - அரசின் அழைப்பிதழில்  நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.

2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்

பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.

பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.

பிப் 13 - குறைந்த அளவு  நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.

பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு  அரசிதழலில் வெளியிட்டது

2014 சன 6-  காவிரி நடுவர் நீதிமன்ற புதிய  தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்


2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று  கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை  விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.

நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.

2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.

செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.

செப் 11 -  உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.

செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை  திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.

செப் 20 -  4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

அக் 03 - காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது

2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில்  தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க  வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி  ஆக குறைப்பு

.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.






கருத்துகள் இல்லை: